கொரோனாவிலிருந்து மீண்டு புதுச்சேரி திரும்பினார் ரங்கசாமி!

 

கொரோனாவிலிருந்து மீண்டு புதுச்சேரி திரும்பினார் ரங்கசாமி!

கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. புதுச்சேரியில் நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனாவிலிருந்து மீண்டு புதுச்சேரி திரும்பினார் ரங்கசாமி!

இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி புதுச்சேரியில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ரங்கசாமிக்கு 9ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா உறுதியானதை அடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஒரு வாரம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பூரண குணமடைந்த அவர் மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆனார்.

கொரோனாவிலிருந்து மீண்டு புதுச்சேரி திரும்பினார் ரங்கசாமி!

சென்னையிலிருந்து புதுச்சேரி திரும்பிய அவர் நேராக கோரிமேடு அப்பா பைத்தியம் சுவாமி கோவிலுக்குச் சென்றார். அங்கு வழிபாடு செய்த பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றார். மருத்துவர்கள் குறைந்தபட்சம் ஒரு வாரம் தனிமையில் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியதின்பேரில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.