புதுவை முதல்வருக்கு கொரோனா இல்லை… ஆனால், தனிமையில் நாராயணசாமி!

 

புதுவை முதல்வருக்கு கொரோனா இல்லை… ஆனால், தனிமையில் நாராயணசாமி!

புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. அதேபோல், புதுவை முதல்வர் அலுவலகத்தில் வேறு யாருக்கும் கொரோனா இல்லை என்றும் உறுதியாகி உள்ளது.
புதுவை முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவருக்கு கொரோனா உறுதியானது.

புதுவை முதல்வருக்கு கொரோனா இல்லை… ஆனால், தனிமையில் நாராயணசாமி!இதனால், முதல்வர், முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர்கள் பீதியடைந்தனர். உடனடியாக முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

புதுவை முதல்வருக்கு கொரோனா இல்லை… ஆனால், தனிமையில் நாராயணசாமி!நாராயணசாமியின் இல்லத்தில் உள்ளவர்கள், அவருக்கு பாதுகாப்புக்கு வரும் காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

புதுவை முதல்வருக்கு கொரோனா இல்லை… ஆனால், தனிமையில் நாராயணசாமி!

அதே நேரத்தில் கொரோனா தொற்று ஒன்று, இரண்டு நாளில் வெளிப்படும் தன்மை கொண்டது இல்லை. எனவே, முதல்வர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவுரையை ஏற்று முதல்வர் நாராயணசாமி தன்னுடைய இல்லத்தில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.