புதுக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

 

புதுக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

சமீப காலமாக தமிழகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படுவது அதிகமாக நடந்து வருகிறது. சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கந்தர்வகோட்டை அருகே வசித்து வந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வேந்தன்பட்டி பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவர் தான் குற்றவாளி என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அரவிந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.