மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை- முன்னாள் விஏஓ-க்கு 14 ஆண்டு சிறை

 

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை- முன்னாள் விஏஓ-க்கு 14 ஆண்டு சிறை

புதுக்கோட்டை

புதுகோட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள கங்காணிபட்டியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் காடப்பன். இவர் கடந்த ஆண்டு மார்ச் 12ஆம் தேதி அன்று, அதேபகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை- முன்னாள் விஏஓ-க்கு 14 ஆண்டு சிறை

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருமயம் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, காடப்பனை கைதுசெய்தனர். இதுதொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று விசாரணை முடிந்து வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சத்யா, காடப்பனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டார். இதில் ஏற்கனவே இரண்டரை லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதால், மீதமுள்ள ஒரு லட்ச ரூபாயை உடனடியாக வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.