புதுக்கோட்டையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

 

புதுக்கோட்டையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கட்டுபாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் வடகாட்டிப்பட்டி அருகே இன்று காலை திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

புதுக்கோட்டையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

இதில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த விராமலை காவல்நிலைய போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் என்பதும், திருச்சிக்கு காரில் சென்றபோது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.