#BREAKING: ஊழியருக்கு கொரோனா; புதுச்சேரி ஆளுநர் மாளிகை மூடல்!

 

#BREAKING: ஊழியருக்கு கொரோனா; புதுச்சேரி ஆளுநர் மாளிகை மூடல்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அங்கு முதல்வர் நாராயணசாமியின் உத்தரவின் படி புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் அங்கு பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது.

#BREAKING: ஊழியருக்கு கொரோனா; புதுச்சேரி ஆளுநர் மாளிகை மூடல்!

புதுச்சேரியில் நேற்று மேலும் 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு 1,041 ஆக இருந்த நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவுக்கு மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,151 ஆக உயர்ந்துள்ளது. மேலும், புதுச்சேரியில் கொரோனாவில் இருந்து 584 பேர் குணமடைந்த நிலையில், 553 பேர் சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரி ஆளுநர் மாளிகை ஊழியருக்கு கொரோனா உறுதியானதால், ஆளுநர் மாளிகை மூடப்பட்டுள்ளது. ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.