புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் சரமாரியாக வெட்டிக் கொலை; முன்விரோதம் காரணமா?!

 

புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் சரமாரியாக வெட்டிக் கொலை; முன்விரோதம் காரணமா?!

விருதுநகர் அருகே புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் முதுகுடியைச் சேர்ந்தவர் புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜலிங்கம். இன்று காலை அவர் தனது பைக்கில் தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். அப்போது அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது.

புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் சரமாரியாக வெட்டிக் கொலை; முன்விரோதம் காரணமா?!

ரத்த வெள்ளத்தில் ராஜலிங்கம் துடித்துக் கொண்டிருந்ததை கண்ட பொதுமக்கள், அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ராஜலிங்கத்தின் உடலில் படுகாயம் இருந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டே வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் சரமாரியாக வெட்டிக் கொலை; முன்விரோதம் காரணமா?!

ராஜலிங்கம் கொலை செய்யப்பட்டதை அறிந்த பொதுமக்கள் உடனடியாக, முதுகுடி அருகே இருக்கும் சாலையில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தேசியாபுரம் பகுதியை சேர்ந்த தங்கவேலு என்பவர் உயிரிழந்ததற்கும் ராஜலிங்கத்துக்கும் தொடர்பு இருப்பதாகவும் முன்விரோதத்தால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.