அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளை கேட்கும் புதிய நீதி கட்சி!

 

அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளை கேட்கும் புதிய நீதி கட்சி!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அதிரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் அதே வேளையில், அதன் கூட்டணிக் கட்சிகள் தொகுதி பங்கீடுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. வெளிப்படையாக கூட்டணி பேச்சுவார்த்தை அறிவிக்கப்படவில்லை என்றாலும் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளை கேட்கும் புதிய நீதி கட்சி!

அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என்பது உறுதியாகிவிட்டது. பாமக, சமத்துவ மக்கள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கேட்ட தொகுதிகளை கொடுத்தால் தான் கூட்டணி என திட்டவட்டமாக விட்டன. குறிப்பாக பிரேமலதாவும் சரத்குமாரும் கேட்ட தொகுதியை கொடுக்காவிட்டால் கூட்டணியில் தொடர மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். ஆனால் மொத்தமாக அதிமுக 234 தொகுதிகளில், 170 இடங்களில் அதிமுக வேட்பாளரையே களமிறக்க திட்டமிட்டுள்ளது. எஞ்சியுள்ள இடங்கள் மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்குமாம்.

அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளை கேட்கும் புதிய நீதி கட்சி!

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளை கேட்டிருப்பதாக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அதிமுக தலைமை அறிவிக்கும் என்றும் அவர் கூறினார்.