பொது மக்கள் அயோத்தியில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்! – யோகி ஆதித்யநாத் கோரிக்கை

 

பொது மக்கள் அயோத்தியில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்! – யோகி ஆதித்யநாத் கோரிக்கை

அயோத்தில் வருகிற 5ம் தேதி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் நிலையில் அங்கு மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.

பொது மக்கள் அயோத்தியில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்! – யோகி ஆதித்யநாத் கோரிக்கை
அயோத்தியில் ராமஜென்ம பூமியில் வருகிற 5ம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த விழாவுக்கு மொத்தம் 200 பேர் மட்டுமே அழைக்கப்படுவார்கள் என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் அதிகம் பேர் கூடுவதை தவிர்க்க இந்த ஏற்பாடு என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் என்பது பக்தர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொது மக்கள் அயோத்தியில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்! – யோகி ஆதித்யநாத் கோரிக்கை

தொடக்க விழாவில் பங்கேற்பது புண்ணியம் என்று கருதுவதால் ஏராளமான பக்தர்கள் அயோத்தி நோக்கி வரத் தொடங்கி உள்ளனர். இதனால், அயோத்தி எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மாற்றுப் பாதைகளில், நதி வழியாக வந்துவிடக் கூடாது என்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொது மக்கள் அயோத்தியில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழா தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

பொது மக்கள் அயோத்தியில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்! – யோகி ஆதித்யநாத் கோரிக்கை

மக்கள் தங்கள் வீட்டில் இருந்தே இதை காணலாம். ராமர் கோவில் கட்டுமானப் பணி சிறப்பாக நடக்க வருகிற 4, 5ம் தேதிகளில் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்களில் தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கோவில் பூமி பூஜை விழா ஆகஸ்ட் 5ம் தேதி பகல் 12.30 முதல் 12.40 வரை அபிஜித் முகூர்த்த நேரத்தில் நடத்தப்படும்.

பொது மக்கள் அயோத்தியில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்! – யோகி ஆதித்யநாத் கோரிக்கை

பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமானப் பணியைத் தொடங்கி வைப்பதற்கு முன்பு அந்த வளாகத்தில் உள்ள அனுமார் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.