மீண்டும் பொதுத்தேர்வு ரத்தா? டிசம்பர் இறுதியில் முடிவு!

 

மீண்டும் பொதுத்தேர்வு ரத்தா? டிசம்பர் இறுதியில் முடிவு!

10,12ம் வகுப்பு தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்து டிசம்பர் மாதம் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது அனைவரும் அறிந்தவையே. இதை தொடர்ந்து, தாமதமாக மாணவர்சேர்க்கை நடத்தப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கின. 7 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த அக்டோபர் மாதம் பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டது. ஆனால், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது.

மீண்டும் பொதுத்தேர்வு ரத்தா? டிசம்பர் இறுதியில் முடிவு!

இதனிடையே, ஆன்லைன் வகுப்புகள் மூலம் குறைந்த அளவிலேயே பாடம் நடத்தப்படுவதால் 40% பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. மீதமுள்ள 60% பாடப்பகுதிகளில் இருந்தே பொதுத்தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

மீண்டும் பொதுத்தேர்வு ரத்தா? டிசம்பர் இறுதியில் முடிவு!

இது ஒருபுறமிருக்க, நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்றும் இந்த முறையும் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்திருக்கிறது. இந்த நிலையில், பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து டிசம்பர் இறுதியில் முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.