ஆபாசப்பேச்சால் வந்த ரூ.4 கோடி பணம்; பப்ஜி மதனின் வங்கிக் கணக்கு முடக்கம்!

 

ஆபாசப்பேச்சால் வந்த ரூ.4 கோடி பணம்; பப்ஜி மதனின் வங்கிக் கணக்கு முடக்கம்!

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை யூடியூபில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து பணம் சம்பாதித்து வந்தவர் மதன். லைவ் ஸ்ட்ரீமிங்கின் போது மதன் ஆபாசமாக பேசுவதாக சைபர் கிரைம் போலீசில் 150க்கும் மேற்பட்ட புகார் குவிந்த நிலையில், அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். விசாரணையில் மதனின் மனைவி கிருத்திகாவும் அவருடன் இணைந்து ஆபாசமாக பேசி சம்பாதித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் தர்மபுரியில் உள்ள உறவினர் வீட்டில் மதன் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

ஆபாசப்பேச்சால் வந்த ரூ.4 கோடி பணம்; பப்ஜி மதனின் வங்கிக் கணக்கு முடக்கம்!

தர்மபுரிக்கு சென்ற தனிப்படை போலீசார் இன்று காலை மதனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதனும் அவரது மனைவி கிருத்திகாவும் யூடியூபில் ஆபாசமாக பேசி இதுவரை 4 கோடி ரூபாய் சம்பாதித்து இருப்பதும் தான் சம்பாதித்த பணத்தை வைத்து இரண்டு ஆடி கார் வாங்கியதும் தனது மனைவியின் வங்கி கணக்கில் 4 கோடி ரூபாய் வைத்திருப்பதும் அம்பலமானது.

இதுமட்டுமில்லாமல், யூடியூபில் தன்னைப் புகழ்ந்து பேசுவோருக்கு 5 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை மதன் சம்பளம் கொடுத்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. மதனுடன் இணைந்து ஆபாசமாக பேசிய அவரது தோழிகளையும் பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், பப்ஜி மதனின் வங்கி கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர். இருவரும் ஒரே வங்கி கணக்கை உபயோகப்படுத்தி வந்த நிலையில் 4 கோடி ரூபாய் இருந்த கிருத்திகாவின் வங்கி கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர்.