மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: PSBB பள்ளியில் மேலும் ஒருவர் கைது!

 

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: PSBB பள்ளியில் மேலும் ஒருவர் கைது!

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்ததையடுத்து போக்சோவில் கைது செய்யப்பட்டார். குற்றத்தை ஒப்புக்கொண்ட ராஜகோபாலான், இன்னும் சில ஆசிரியர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தர். இதைத்தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: PSBB பள்ளியில் மேலும் ஒருவர் கைது!

இந்நிலையில் பாலியல் புகார் தொடர்பாக சென்னை அண்ணா நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியின் கராத்தே மாஸ்டரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மாணவி ஒருவர் அளித்த பாலியல் தொந்தரவு தொடர்பான புகாரின் பேரில் கராத்தே மாஸ்டர் கெபி ராஜிடம், அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.