“என்னது நான் நிதிய சோனியாவுக்கு கொடுத்தேனா?; நிரூபிக்கலேனா அமித் ஷா மேல வழக்கு போடுவேன்” – நாராயணசாமி ஆவேசம்

 

“என்னது நான் நிதிய சோனியாவுக்கு கொடுத்தேனா?; நிரூபிக்கலேனா அமித் ஷா மேல வழக்கு போடுவேன்” – நாராயணசாமி ஆவேசம்

காரைக்காலில் அமித் ஷா நேற்று தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, “பிரதமர் மோடி புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ.15 ஆயிரம் கோடி நிதி அனுப்பினார். முதல்வர் நாராயணசாமி அதில் ஒரு பகுதியை எடுத்து சோனியா காந்தி குடும்பத்துக்கு அனுப்பிவிட்டார்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“என்னது நான் நிதிய சோனியாவுக்கு கொடுத்தேனா?; நிரூபிக்கலேனா அமித் ஷா மேல வழக்கு போடுவேன்” – நாராயணசாமி ஆவேசம்

தற்போது இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசியுள்ள நாராயணசாமி, ”பிரதமர் அனுப்பிய நிதியை நான் சோனியா காந்தி குடும்பத்துக்குக் கொடுத்துவிட்டேன் என அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். இது உண்மையில் எனக்கு எதிரான தீவிரமான குற்றச்சாட்டு. என் மீது அவதூறு கூறி, என் மதிப்பையும் மரியாதையையும், சோனியா காந்தி குடும்பத்தின் மாண்பையும் குலைக்கும் வகையில் அமித் ஷா பேசியுள்ளார்.

“என்னது நான் நிதிய சோனியாவுக்கு கொடுத்தேனா?; நிரூபிக்கலேனா அமித் ஷா மேல வழக்கு போடுவேன்” – நாராயணசாமி ஆவேசம்

இந்தக் குற்றச்சாட்டை அமித் ஷா நிரூபிக்காவிட்டால், நான் அவர் மீது அவதூறு வழக்குத் தொடர்வேன். அமித் ஷா பொய்யான குற்றச்சாட்டைக் கூறியிருந்தால், அவர் புதுச்சேரி மக்களிடமும், இந்த தேசத்திடமும் மன்னிப்பு கோர வேண்டும். இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா என நான் அவருக்குச் சவால் விடுகிறேன்” என்றார்.