கொரோனா பரவல் காரணமாக சென்னையில் போராட்டம், பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை!

 

கொரோனா பரவல் காரணமாக சென்னையில் போராட்டம், பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை!

கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வந்ததால், நோயக்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து மத வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக சென்னையில் போராட்டம், பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை!

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் செப்டம்பர் 26 முதல் அக்டோப 1 ஆம் தேதி வரை பேரணி, பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.