திருச்சியில் சாலை விரிவாக்கத்திற்கு பள்ளிவாசல் இடிப்பு – சாலைமறியலில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

 

திருச்சியில் சாலை விரிவாக்கத்திற்கு பள்ளிவாசல் இடிப்பு – சாலைமறியலில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபமாக மேம்பால பணிகள் முடிவடைந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

திருச்சியில் சாலை விரிவாக்கத்திற்கு பள்ளிவாசல் இடிப்பு – சாலைமறியலில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

இந்நிலையில் மேம்பாலத்தில் அணுகு சாலை பணிகள் நிறைவடையாமல் இருந்த நிலையில் இன்று சர்வீஸ் ரோடு விரிவாக்கத்திற்காக 9 மீட்டர் பள்ளிவாசல் நெடுஞ்சாலையின் ஆக்கிரமிப்பில் இருந்ததால் அதனை 2.5 மீட்டர் வரை இடித்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த இரண்டு வருடங்களாக இதற்கு முறையாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இடிக்காத நிலையில் நீதிமன்ற உத்தரவை பெற்று நெடுஞ்சாலைத்துறையினர் இன்று பள்ளிவாசலின் முற்பகுதி ஆக்கிரமிப்பை இடித்தனர்.

இதை கண்டித்து அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் திருவானைக்காவல் மேம்பாலம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களும் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.