நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் திமுக, விசிக ஆர்ப்பாட்டம்!

 

நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் திமுக, விசிக ஆர்ப்பாட்டம்!

நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் விசிக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வை அரசு அறிமுகப்படுத்தியதில் இருந்தே தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இருப்பினும், பல எதிர்ப்புகளுக்கிடையே நாளை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதனை ஒத்திவைக்குமாறு பலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நீட் தேர்வு ஒத்திவைக்கப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இந்த தேர்வை எதிர்கொள்ள முடியாத தமிழக மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் திமுக, விசிக ஆர்ப்பாட்டம்!

நேற்று முன்தினம் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, இன்று காலை ஜோதி துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருவதால், அரசியல் தலைவர்கள் பலர் நீட் தேர்வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னையில் நீட் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக தொண்டர்களும் விசிக தொண்டர்களும் இணைந்து மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே போல நீட் தேர்வுக்கு எதிராக புதுச்சேரியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.