‘புதுச்சேரிக்கு ஒருரூபாய்கூட கொரோனா நிதியாக மத்திய அரசு கொடுக்கவில்லை’ தமிழ்த்தேசிய பேரியக்கம் போராட்டம்!

 

‘புதுச்சேரிக்கு ஒருரூபாய்கூட கொரோனா நிதியாக மத்திய அரசு கொடுக்கவில்லை’ தமிழ்த்தேசிய பேரியக்கம் போராட்டம்!

‘புதுச்சேரிக்கு ஒரு ரூபாய்கூட நிதியாக மத்திய அரசு கொடுக்க வில்லை’ கண்டித்து தமிழ்த்தேசிய பேரியக்கம் போராட்டம்!

கொரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதுமே பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. இந்தியாவிலும் கடும் வேகத்துடன் பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி அளித்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி புறக்கணிப்பட்டிருப்பதாக தமிழ்த்தேசியப் பேரியக்கம் இன்று போராட்டம் நடத்துகிறது.

‘புதுச்சேரிக்கு ஒருரூபாய்கூட கொரோனா நிதியாக மத்திய அரசு கொடுக்கவில்லை’ தமிழ்த்தேசிய பேரியக்கம் போராட்டம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கம், “புதுச்சேரி மாநிலத்தை விட குறைவான மக்கள் தொகையும், பாதிப்பு எண்ணிக்கையும் கொண்ட மிசோரம் போன்ற மாநிலங்களுக்குக் கூட 30 கோடி ரூபாய் – கொரோனா பேரிடர் நிதி வழங்கியுள்ள இந்திய அரசே, இந்த நிமிடம் வரை புதுச்சேரிக்கு, ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் வேடிக்கைப் பார்க்கிறது.

‘புதுச்சேரிக்கு ஒருரூபாய்கூட கொரோனா நிதியாக மத்திய அரசு கொடுக்கவில்லை’ தமிழ்த்தேசிய பேரியக்கம் போராட்டம்!

இப்போது, புதுச்சேரியின் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 402 ஆக உள்ளது. 9 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இது இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சமுள்ளது. மொத்தமாகவே இங்கு அரசு மருத்துவமனைகளில் 50 வெண்டிலேட்டர்கள்தான் இருக்கின்றன. நாளை நிலைமை கைமீறினால் என்ன செய்வது? புதுச்சேரியின் அரசு மருத்துவமனைகளில் கபசுரக் குடிநீர் கூட வழங்கப்படுவதில்லை!

எனவே, புதுச்சேரிக்கு உடனே நிதி ஒதுக்கக் கோரி நாளை (25.06.2020) காலை 10 மணிக்கு புதுச்சேரி – காந்தி வீதி – அமுதசுரபி சந்திப்பில் கறுப்புக் கொடியுடன் கண்டனப் போராட்டம் நடத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.