திமுக எம்.பி ஆ. ராசா மீது வழக்குப்பதிவு!!

 

திமுக எம்.பி ஆ. ராசா மீது வழக்குப்பதிவு!!

முதல்வரை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த புகாரில் திமுக எம்.பி. ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக எம்.பி ஆ. ராசா மீது வழக்குப்பதிவு!!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட திமுக எம்.பி. ஆ.ராசா, நல்ல உறவில், ஆரோக்கியமாக சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறை பிரசவம் பழனிசாமி. நல்ல குழந்தைக்கு தாய்ப்பால் போதும். தமிழகம் தான் அவருக்கு தாய். குறை பிரசவ குழந்தையை காப்பாற்ற, டில்லியில் இருந்து மோடி என்ற, டாக்டர் வருகிறார்” என்று கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் தேர்தல் ஆணையம் வரை செல்ல, ஸ்டாலின், கனிமொழி கண்டனம் தெரிவித்தனர்.

திமுக எம்.பி ஆ. ராசா மீது வழக்குப்பதிவு!!

இதுகுறித்து விளக்கமளித்த ஆ.ராசா , முதல்வர் பழனிசாமி பற்றி தனிப்பட்ட முறையில் நான் விமர்சிக்கவில்லை . எனது பேச்சு வெட்டியும் ஒட்டியும் சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்படுகிறது என்றார். இந்நிலையில் முதல்வரை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த புகாரில் திமுக எம்பி ஆர் ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபாசமாகத் திட்டுதல், கலகம் செய்யத் தூண்டி விடுதல் , தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.