தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவு 23ஆம் தேதிக்கு மாற்றம்!

 

தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவு 23ஆம் தேதிக்கு மாற்றம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவு வரும் 22 ஆம் தேதிக்கு பதில் 23 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவு 23ஆம் தேதிக்கு மாற்றம்!

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020- 22 ஆண்டுகளுக்கான நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள வளாகத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் தொடர்ந்து நிர்வாகிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று , முடிவுகள் 22 ஆம் தேதி அன்றே அறிவிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவு 23ஆம் தேதிக்கு மாற்றம்!

மேலும் தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் கடைப்பிடிக்கும் விதமாகவும், பொது பாதுகாப்பு சம்பந்தமான காவல்துறையின் அறிவுறுத்தலின்படி செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை 23 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி அன்று மாலை முடிவுகள் அறிவிக்கப்படும். செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்குப்பதிவு முடிந்தவுடன், தேர்தல் நடக்கும் கல்லூரியில் காவல்துறை பாதுகாப்புடன் சீல் வைக்கப்படும்.

அத்துடன் வேட்பாளர்கள் அல்லது அவரது பிரதிநிதிகள் கல்லூரி வளாகத்திற்கு வரும்போது அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி வர வேண்டும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் அதிகாரியும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.