பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான ஹத்ராஸ் பெண் மரணம்…. யோகி ஆதித்யநாத்தை சாடிய பிரியங்கா காந்தி

 

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான ஹத்ராஸ் பெண் மரணம்…. யோகி ஆதித்யநாத்தை சாடிய பிரியங்கா காந்தி

உத்தர பிரதேசம் ஹத்ராஸில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான தலித் பெண் நேற்று சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இதனையடுத்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கடந்த 14ம் தேதியன்று பசுக்களுக்கு புல் வெட்டுவதற்காக 19 வயது தலித் பெண் ஒருவர் தனது அம்மாவுடன் வயலுக்கு சென்றார். திடீரென காணாமல் போன அந்த பெண்ணை தாய் தேடிய போது சுமார் 100 மீட்டர் தொலைவில் ஆடையில்லாமல், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, நாக்கு வெட்டப்பட்டு மற்றும் முதுகெலும்பு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்த தனது மகளை அந்த தாய் ரிக்ஷாவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஜவஹர்கலால் நேரு மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் உடல் நிலை மோசமடைந்ததால் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அந்த பெண் மாற்றப்பட்டார். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி நேற்று அந்த பெண் மரணம் அடைந்தார்.

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான ஹத்ராஸ் பெண் மரணம்…. யோகி ஆதித்யநாத்தை சாடிய பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

ஹத்ராஸ் பெண் சிகிச்சை பலன் இன்றி இறந்தது தொடர்பாக பிரியங்கா காந்தி டிவிட்டரில், உத்தர பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு யோகி ஆதித்யநாத் நீங்கள்தான் பொறுப்பு. ஹத்ராஸில் மிருகத்தனத்தை எதிர்கொண்ட தலித்பெண் இரண்டு வாரங்கள் உயிருக்கு போராடி சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிர் இறந்தார். ஹத்ராஸ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும். என பதிவு செய்து இருந்தார்.

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான ஹத்ராஸ் பெண் மரணம்…. யோகி ஆதித்யநாத்தை சாடிய பிரியங்கா காந்தி
மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டிவிட்டரில், ஹத்ராஸில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் பெண் இறந்த செய்தியால் ஆழ்ந்த வருத்தம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உத்தர பிரதேச அரசு வழங்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கோரிக்கை விடுக்கிறது, இந்த வழக்கில் நீதி வழங்க விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என என பதிவு செய்து இருந்தார்.