முதல்வரின் சொந்த ஊரிலேயே ஆட்கடத்தல் நடக்கிறது… யோகி ஆதித்யநாத் அரசை தாக்கிய பிரியங்கா காந்தி

 

முதல்வரின் சொந்த ஊரிலேயே ஆட்கடத்தல் நடக்கிறது… யோகி ஆதித்யநாத் அரசை தாக்கிய பிரியங்கா காந்தி

உத்தர பிரதேச மாநிலத்தில் நடக்கு ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பிரியங்கா காந்தி கூறியிருப்பதாவது: மாநிலத்தில் ஆட்கடத்தல் வழக்குகள் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகிறது. விரைவாக செயல்படுவது போலீஸ் மற்றும் மாநில நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

முதல்வரின் சொந்த ஊரிலேயே ஆட்கடத்தல் நடக்கிறது… யோகி ஆதித்யநாத் அரசை தாக்கிய பிரியங்கா காந்தி

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சரிசெய்யுமாறு உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். மக்கள் அனைவரும் துன்பத்தில் உள்ளனர். இவ்வாறு அந்த கடித்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில், முதல்வர் செய்திகளை பார்ப்பதை நிறுத்தி விட்டாரா? அல்லது அறிக்கைகள் உள்துறைக்கு செல்லவில்லையா?

முதல்வரின் சொந்த ஊரிலேயே ஆட்கடத்தல் நடக்கிறது… யோகி ஆதித்யநாத் அரசை தாக்கிய பிரியங்கா காந்தி

ஒவ்வொரு நாளும் குண்டராஜின் புதிய பதிவுகள் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆட்கடத்தல் சம்பவம் முதல்வரின் சொந்த ஊரில் நடக்குகிறது. கஸ்கஞ்சில் படுகொலை. ஆனால் அதிகாரிகளை மாற்றுவதை தவிர, அதன் பொருட்டு வேறு எதுவும் நடக்காது. காட்டாட்சி அதிகரித்து வருகிறது என பதிவு செய்து இருந்தார்.