பொய்யான வாக்குறுதிகள், ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் கேரள மக்கள் ஏமாற மாட்டார்கள்.. பிரியங்கா காந்தி

 

பொய்யான வாக்குறுதிகள், ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் கேரள மக்கள் ஏமாற மாட்டார்கள்.. பிரியங்கா காந்தி

பொய்யான வாக்குறுதிகள், ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் கேரள மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

கேரள மாநிலம் கருணாகப்பள்ளியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பிரியங்காந்தி பேசுகையில் கூறியதாவது: கேரளா, எந்தவொரு பொய்யான வாக்குறுதிகள் மற்றும் ஊழல் நிர்வாகத்தால் உங்களை முட்டாளாக்க முடியாது என்பதை இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் வெளிப்படுத்த விரும்புகிறேன்.

பொய்யான வாக்குறுதிகள், ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் கேரள மக்கள் ஏமாற மாட்டார்கள்.. பிரியங்கா காந்தி
காங்கிரஸ்

ஊழல், நிர்வாகம், அதிகாரத்தை விரும்பும் மக்கள், உங்களுக்கு சேவை செய்யாதவர்கள். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் நீங்கள் சிறந்த அரசாங்கத்தை பெறலாம். அதனால் வளர்ச்சியின் உச்சியின் கேரளாவை வைக்கலாம். உங்களது பொருளாதாரமும் மீண்டும் வலுவடையும். கேரளாவின் புதிய தலைமுறையினரின் அரசியல்வாதிகளை முனவைக்க எங்களது வேட்பாளர்களை வலுப்படுத்த வாக்களியுங்கள்.

பொய்யான வாக்குறுதிகள், ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் கேரள மக்கள் ஏமாற மாட்டார்கள்.. பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தியை வரவேற்ற அரிதா பாபு

உங்களுக்காக சேவை செய்யும் அரசாங்கமாக நீங்களே மாற்றுங்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக கருணாகப்பள்ளிக்கு வந்த பிரியங்கா காந்தியை கேரளாவின் மிக இளவயது வேட்பாளரான அரிதா பாபு வரவேற்றார். கருணாகப்பள்ளி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அரிதா பாபு போட்டியிடுகிறார். கேரளாவில் மொத்தம் உள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.