மோடி அரசு நமது நாட்டை மதத்தின் பெயரால் எவ்வாறு பிரித்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.. பிரியங்கா காந்தி

 

மோடி அரசு நமது நாட்டை மதத்தின் பெயரால் எவ்வாறு பிரித்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.. பிரியங்கா காந்தி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நமது சொந்த நாட்டை மதத்தின் பெயரால் எவ்வாறு பிரித்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

கேரளாவில் திருச்சூரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட அந்த கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில் கூறியதாவது: நேற்று முன்தினம் பிரதமர் மோடி பைபிளிலிருந்து வரிகளை குறிப்பிட்டு பேசினார். கேரளாவில் அனைத்து பகுதிகளிலும் தேர்தல்கள் இருப்பதால்தான் அப்படி பேசினார் என நான் நினைக்கிறேன்.

மோடி அரசு நமது நாட்டை மதத்தின் பெயரால் எவ்வாறு பிரித்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.. பிரியங்கா காந்தி
பைபிள்

ஏனென்றால் ஜான்சியில் துன்புறுத்தப்பட்ட சகோதரிகள் குறித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசி நான் கேட்கவில்லை, ஆகையால் நாட்டில் பிளவு மற்றும் வெறுப்பு விதைகளை விதைக்க பைபிளிலிருந்து மேற்கோள் காட்டுவதை விட வெற்று எதுவும் இல்லை. ஏழைகளுக்கு சேவை செய்வதற்காக யாருடைய வாழ்க்கையை செலவழிக்கிறார்களோ அவர்கள் மீது வழக்கு போட்டு விட்டு, அரசியல் மேடையில் இயேசுவின் வரிகளை மேற்கோள் காட்டி பேசுவதை காட்டிலும் மோசமானது எதுவும் இல்லை.

மோடி அரசு நமது நாட்டை மதத்தின் பெயரால் எவ்வாறு பிரித்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.. பிரியங்கா காந்தி
பிரதமர் மோடி

ஒரு ஆட்சியாளரின் கொடுங்கோன்மையை அம்பலப்படுத்தியது இயேசு கிறிஸ்து தான். அவருடைய (ஆட்சியாளரின்) பேராசையும் சுயநலமும் அவருடைய மக்களை அழித்தன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நமது சொந்தை நாட்டை மதத்தின் பெயரில் எவ்வாறு பிரித்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த 30ம் தேதி கேரளாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், சில வெள்ளிப்பணத்துக்காக கடவுள் ஏசுவை யூதாஸ் காட்டிக்கொடுத்தார். ஆனால், இங்கு ஆட்சியில் இருக்கும் இடதுசாரிகள் அரசு சில தங்கக்கட்டிகளுக்காக, மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது என தெரிவித்தார்.