மக்களுக்காக பணியாற்றுங்க…. அரசாங்கத்தை கவிழ்க்கிற வேலை பார்க்காதீங்க… பா.ஜ.க.வை தாக்கிய பிரியங்கா காந்தி..

 

மக்களுக்காக பணியாற்றுங்க…. அரசாங்கத்தை கவிழ்க்கிற வேலை பார்க்காதீங்க… பா.ஜ.க.வை தாக்கிய பிரியங்கா காந்தி..

காங்கிரஸ் கட்சி ஆன்லைனில் ‘ஸ்பீக் அப் இந்தியா’ என்ற பிரச்சாரத்தை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அந்த கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் நெருக்கடியின் தன்மை மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரியது மற்றும் அதை கட்டுப்படுத்த அரசாங்கம் போராடுகிறது.

மக்களுக்காக பணியாற்றுங்க…. அரசாங்கத்தை கவிழ்க்கிற வேலை பார்க்காதீங்க… பா.ஜ.க.வை தாக்கிய பிரியங்கா காந்தி..

ஆனால், அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு பதிலாக அரசாங்கத்தை ஸ்திரமின்மைக்குள்ளாக்கவும், கவிழ்க்கவும் முயற்சிக்கிறீர்கள். ஒருவருக்கொருவர் உதவ வேண்டிய நேரம் மற்றும் மக்களுக்காக வேலை செய்யுங்கள். ஏனென்றால் அவர்கள் மீது நமக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. பேருந்துகளைப் பயன்படுத்தும்போது உங்க சொந்த பேனர்கள் மற்றும் ஸ்டிக்கர்களையும் வைக்குமாறு நாங்கள் பரிந்துரைத்த போதிலும் எங்களது ஆயிரம் பேருந்துக்களை மறுத்து விட்டீர்கள். அதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் உறுதியளித்த 12 ஆயிரம் பேருந்துகள் காகிதங்களில் மட்டுமே இருந்தன. அவை ஒரு போதும் சாலைக்கு வரவில்லை. இவ்வாறு அவர் பா.ஜ.க. தலைவர்களையும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் மறைமுகமாக தாக்கி பேசி இருந்தார்.

மக்களுக்காக பணியாற்றுங்க…. அரசாங்கத்தை கவிழ்க்கிற வேலை பார்க்காதீங்க… பா.ஜ.க.வை தாக்கிய பிரியங்கா காந்தி..

உத்தர பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலத்துக்கு செல்வதற்காக காங்கிரஸ் ஏற்பாடு செய்த ஆயிரம் பஸ்கள் தொடர்பான விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புலம்பெயர்ந்தவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள ஆயிரம் பஸ்கள் குறித்த விவரம் என காங்கிரஸ் அளித்த பஸ்கள் பட்டியலில் பெரும்பாலானவை இரு சக்கர வாகனங்கள், வர்த்தக வாகனங்கள் என்பதை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கண்டுபிடித்தது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்தது. மேலும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் லாலுவையும் ஜெயிலில் அடைத்தது.