தனியார் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்…

 

தனியார் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்…

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் தனியார் டயர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், ஆலையில் பற்றி எரிந்து வரும் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

தனியார் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்…

இந்த தீ விபத்தில் ஆலையில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரப்பர் மற்றும் இயந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்ததாக கூறப்படுகிறது. தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பிறகே சேதம் விவரம் முழுமையாக தெரியும் என ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, டயர் ஆலையில் இருந்து எழும் கரும்புகையினால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது. விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.