தனியார் நூற்பாலை வாகனம் கவிழ்ந்து விபத்து- 2 தொழிலாளர்கள் பலி, 8 பேர் படுகாயம்

 

தனியார் நூற்பாலை வாகனம் கவிழ்ந்து விபத்து- 2 தொழிலாளர்கள் பலி, 8 பேர் படுகாயம்

விருதுநகர்

திருச்சுழி அருகே தனியார் நூற்பாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் இருவர் உயிழிந்தனர், 8 பேர் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பந்தல்குடி பகுதியில் தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு கமுதி சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, ஆலைக்கு சொந்த மினி வேன் சென்றுள்ளது.

தனியார் நூற்பாலை வாகனம் கவிழ்ந்து விபத்து- 2 தொழிலாளர்கள் பலி, 8 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சாமிநத்தம் விலக்கு அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த செல்லையாபுரத்தை சேர்ந்த பூசையா (25), ஸ்ரீகாந்த் (18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், வாகனத்தில் பயணம் செய்த 8 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.