தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் இல்லை…புதிதாக கிளம்பும் சர்ச்சை!

 

தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் இல்லை…புதிதாக கிளம்பும் சர்ச்சை!

கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 15 ஆம் தேதி நடக்கவிருந்த 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பலர் கோரிக்கை விடுத்தனர். அதனால் அந்த பொதுத்தேர்வும், 11 ஆம் வகுப்புக்கான மீதமுள்ள தேர்வும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் ஆல்பாஸ் ஆக அறிவிக்கப்பட்டனர். தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு விடைத்தாள்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை ஒப்படைக்குமாறு அனைத்துப் பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டார்.

தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் இல்லை…புதிதாக கிளம்பும் சர்ச்சை!

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் விடைத்தாள்கள் இல்லை என்று தெரிய வந்துள்ளது. அதாவது பெரும்பாலான தனியார் பள்ளிகள் மதிப்பெண்களை குறித்து வைத்துக் கொண்டு விடைத்தாள்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்து விட்டதாகவும் அதனை பெற்றோர் பாதுகாத்து வைக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்த தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர், மாணவர்களின் விடைத்தாள்கள் வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டால் தவறு நடக்க வாய்ப்பு இருப்பதால், பதிவேடுகளில் இருக்கும் மதிப்பெண்களை வைத்து பொதுத்தேர்வு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.