டேங்கர் லாரி மோதி தீப்பற்றி எரிந்த பைக்… ஆசிரியை உடல்கருகி பலி…

 

டேங்கர் லாரி மோதி தீப்பற்றி எரிந்த பைக்… ஆசிரியை உடல்கருகி பலி…

விழுப்புரம்

திண்டிவனம் அருகே டேங்கர் லாரி மோதியதில், இருசக்கர வாகனம் தீப்பற்றியதில் ஆசிரியை உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள பாதிராபுலியூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை பணிமுடிந்து, மகாலட்சுமி தனது இருசக்கர வானத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

பாதிராப்புலியூர் அருகே சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் சென்றபோது, மகாலட்சுமி வாகனத்தின் மீது பின்னால் வந்த டேங்கர் லாரி மோதியது. இதில் லாரியில் சிக்கிக்கொண்ட இருசக்கர வாகனம் சாலை இழுதுச் செல்லப்பட்டது. அப்போது இருசக்கர வாகனத்தில் தீப்பற்றி லாரிக்கும் பரவியது. இதில் ஆசிரியை மகாலட்சுமி படுகாயம் அடைந்தார்.

டேங்கர் லாரி மோதி தீப்பற்றி எரிந்த பைக்… ஆசிரியை உடல்கருகி பலி…

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகாலட்சுமி உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் இருசக்கர வாகனம் மற்றும் லாரி எரிந்து சேதமடைந்தது. விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.