கொரோனாவை காரணம் காட்டி கொள்முதல் விலையைக் குறைக்கும் தனியார் பால் நிறுவனங்கள்! – நடவடிக்கை எடுக்க பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்

 

கொரோனாவை காரணம் காட்டி கொள்முதல் விலையைக் குறைக்கும் தனியார் பால் நிறுவனங்கள்! – நடவடிக்கை எடுக்க பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்

கொரோனாவை காரணம் காட்டி கொள்முதல் விலையைக் குறைக்கும் தனியார் பால் நிறுவனங்கள்! – நடவடிக்கை எடுக்க பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்
கொரோனா பாதிப்பைக் காரணம் காட்டி தங்கள் இஷ்டம் போல் பால் கொள்முதல் விலையைக் குறைத்து, பாலின் விலையைத் தனியார் பால் நிறுவனங்கள் உயர்த்தி வருவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்க தலைவர் பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பொன்னுசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பேரிடர் காலமான தற்போது வணிகம் சார்ந்த பால் விற்பனை என்பது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை காரணமாக வைத்து அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 15.00 ரூபாய்க்கு அதிகமாக குறைத்தே கொள்முதல் செய்கின்றன. இதே தனியார் பால் நிறுவனங்கள் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பால் கொள்முதல் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தைக் கூறி பால் விற்பனை விலையை லிட்டருக்கு 6.00ரூபாய்க்கும் மேல் உயர்த்தின.

கொரோனாவை காரணம் காட்டி கொள்முதல் விலையைக் குறைக்கும் தனியார் பால் நிறுவனங்கள்! – நடவடிக்கை எடுக்க பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்ஆனால் தற்போது பால் விற்பனை ஆகவில்லை என்கிற காரணத்தைச் சுட்டிக் காட்டி கொள்முதல் விலையை லிட்டருக்கு 15.00 ரூபாய்க்கு அதிகமாக குறைத்தே கொள்முதல் செய்வதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கொரோனா பேரிடர் காலமான தற்போது பால் உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்தி செலவினங்களைக் கூட ஈடுசெய்ய முடியாமல் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் தனியார் பால் நிறுவனங்களின் தன்னிச்சையான செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக அமைந்துள்ளது. மேலும் தமிழக அரசோ ஆவின் நிறுவனம் மட்டுமே தமிழகத்தில் பால் கொள்முதல் மற்றும் விநியோகம் செய்வது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி வருவதோடு, ஆவின் நிறுவனத்திற்கான பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையைத் தமிழக அரசு நிர்ணயம் செய்து வருகிறது.
எனவே தனியார் பால் நிறுவனங்களின் தன்னிச்சையாக பால் விற்பனை விலை உயர்வு, கொள்முதல் விலை குறைப்பு போன்ற நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்திடவும், பால் உற்பத்தியாளர்கள் வாழ்வில் வசந்தம் வீசிட நியாயமான விலை கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்திடுமாறு தமிழக முதல்வரைத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.