மலைவாழ் குழந்தைகளுடன் தீபாவளி- தன்னார்வ அமைப்புக்கு மக்கள் பாராட்டு!

 

மலைவாழ் குழந்தைகளுடன் தீபாவளி- தன்னார்வ அமைப்புக்கு மக்கள் பாராட்டு!

நீலகிரி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மேற்கு தொடர்ச்சி மலை ஆனைகட்டி பகுதியில் மலை வாழ் குழந்தைகளுக்கு, டிவிங்கிள் சேவா என்கிற தன்னார்வ அமைப்பினர் புத்தாடை, இனிப்புகள் வழங்கி தீபாவளி கொண்டாடினர்.

மலைவாழ் குழந்தைகளுடன் தீபாவளி- தன்னார்வ அமைப்புக்கு மக்கள் பாராட்டு!

டிவிங்கிள் சேவா மற்றும் பெண்ணிவிஸ் சொல்யூஷன் அமைப்பின் சார்பாக, ஆனைகட்டி பகுதியில் ஏழு மலை கிராமங்களில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி சேவைகள் மற்றும் உதவிகள் அளித்து வருகின்றனர். இந்த தீபாவளியை அவர்களுடன் கொண்டாட முடிவெடுத்த அந்த அமைப்பினர் புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி தீபாவளி கொண்டாடினர்.

மலைவாழ் குழந்தைகளுடன் தீபாவளி- தன்னார்வ அமைப்புக்கு மக்கள் பாராட்டு!

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் கோவை ரோட்டரி சங்கத்தினர், டிவிங்கிள் சேவா அமைப்பை சேர்ந்த பல இளைஞர்களும் கலந்து கொண்னர். சுமார் 300 குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் அளிக்கப்பட்டன. இந்த செயலுக்கு மலைவாழ் கிராம மக்கள் நன்றி தெரிவித்து, பாராட்டுகளையும் தெரிவித்தனர்.