அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பனியன் நிறுவன ஊழியர் பலி!

 

அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பனியன் நிறுவன ஊழியர் பலி!

திருப்பூர்

பல்லடம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், பனியன் நிறுவன தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் காட்டூரை சேர்ந்தவர் அய்யப்பன்(40). இவர் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை அய்யப்பன் தனது இருசக்கர வாகனத்தில் பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பனியன் நிறுவன ஊழியர் பலி!

மாதப்பூர் அருகே சிங்கனூர் புதூர் சாலையில் சென்றபோது அய்யப்பன் வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அய்யப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய நபரை தேடி வருகின்றனர்.