சீட்டு விளையாடுவதில் தகராறு… இளைஞர் கத்தியால் குத்திக்கொலை!

 

சீட்டு விளையாடுவதில் தகராறு… இளைஞர் கத்தியால் குத்திக்கொலை!

தேனி

தேனி அருகே சீட்டு விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் அல்லிநகரம் அடுத்த பொம்மைய கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராம் பிரசாத் (30). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த ராம் பிரசாத், அந்த பகுதியில் உள்ள இளைஞர்களுடன் சீட்டு விளையாடி உள்ளார்.

சீட்டு விளையாடுவதில் தகராறு… இளைஞர் கத்தியால் குத்திக்கொலை!

அப்போது, அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் ராம் பிரசாத்தை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் ராம்பிரசாத்தை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த அல்லிநகரம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.