தாமிரபரணி ஆற்றில் மூழ்கி, பீடி நிறுவன தொழிலாளி பலி!

 

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி, பீடி நிறுவன தொழிலாளி பலி!

நெல்லை

நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் குளித்த பீடி நிறுவன தொழிலாளி, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை மேலப்பாளையம் பெரிய கொத்பா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் ஷேக் முகமது. இவர் அந்த பகுதியில் செயல்பட்டு வந்த பீடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், ஷேக் முகமது நேற்று தனது நண்பர்களுடன் மேலநத்தம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றிருந்தார்.

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி, பீடி நிறுவன தொழிலாளி பலி!

ஆற்றில் குளித்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கிய ஷேக் முகமது நீரில் மூழ்கினார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் தண்ணீரில் இறங்கி தேடியபோது, ஷேக் முகமது உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தகவல் அறிந்து அங்கு வந்த மேலப்பாளையம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.