ஓகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி, தனியார் நிறுவன ஊழியர் மாயம்!

 

ஓகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி, தனியார் நிறுவன ஊழியர் மாயம்!

தருமபுரி

ஓகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்த தனியார் நிறுவன ஊழியர், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சிக்க மாரண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் ரஞ்சித்குமார் (21). இவர், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று உறவினரின் ஈமச் சடங்கிற்காக குடும்பத்தினருடன் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வந்திருந்தார்.

ஓகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி, தனியார் நிறுவன ஊழியர் மாயம்!

ஈமச் சடங்குகளை முடித்த பின்னர், அங்குள்ள சாரணர் இயக்க பயிற்சி நிலையம் பின் பகுதியில் குடும்பத்துடன் காவிரி ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற ரஞ்சித்குமார் நீரில் மூழ்கி மாயமாகினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ஒகேனக்கல் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் மூழ்கிய ரஞ்சித்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈமச்சடங்கு செய்ய வந்த இளைஞர், ஆற்றில் மூழ்கிய சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.