கோவில்பட்டி அருகே தனியார் கல்லூரி ஊழியர் தற்கொலை!

 

கோவில்பட்டி அருகே தனியார் கல்லூரி ஊழியர் தற்கொலை!

தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே தனியார் கல்லூரி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த முடுக்கு மீண்டான்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (52). இவர் தனியார் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

கோவில்பட்டி அருகே தனியார் கல்லூரி ஊழியர் தற்கொலை!

இந்த நிலையில், இளையராஜா இளைப்பு நோய் உள்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப் பட்டிருந்துள்ளார். இதற்காக சிகிச்சை எடுத்தும் நோய் குணமடைய வில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், நாலாட்டின் புதூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துத விசாரித்து வருகின்றனர்.