பைக் மீது லாரி மோதிய விபத்தில், கல்லூரி விரிவுரையாளர் பலி

 

பைக் மீது லாரி மோதிய விபத்தில், கல்லூரி விரிவுரையாளர் பலி

மதுரை

மதுரை அருகே இருசக்கர வாகனமும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தனியார் கல்லூரி விரிவுரையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த ஆதிநாராயணன் என்பவரது மகன் பாலமுருகன். இவர் திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை பாலமுருகன் கல்லூரிக்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

பைக் மீது லாரி மோதிய விபத்தில், கல்லூரி விரிவுரையாளர் பலி

மதுரை புறவழிச் சாலையில் உள்ள விராட்டிப்பத்து சோதனைச் சாவடி அருகே சென்றபோது இருசக்கர வாகனம் மீது, எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் லாரி சக்கரம் ஏறியதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.