கடன் தொல்லையால் தனியார் கல்லூரி ஊழியர் தற்கொலை!

 

கடன் தொல்லையால் தனியார் கல்லூரி ஊழியர் தற்கொலை!

கன்னியாகுமரி

குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே கடன் தொல்லையால் தனியார் கல்லூரி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே உள்ள தேரிவிளை பகுதியை சேர்ந்தவர் குமார் வேதமாணிக்கம் (55). இவர் தனியார் கல்லூரியில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஞானசெல்வம்(52). இவர்களுக்கு பீனா குமாரி (25), ஷிபுகுமார் (20) என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மகளுக்கு திருமணம் செய்த நிலையில், அதற்காக பலரிடமும் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

கடன் தொல்லையால் தனியார் கல்லூரி ஊழியர் தற்கொலை!

இந்த நிலையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கல்லூரி செயல்படாததால், குமார் வேதமாணிக்கத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக சரவர சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொல்லை அளித்து வந்துள்ளனர். மேலும், வருமானம் இன்றி குடும்பம் வறுமையில் வாடியதால் குமார் வேதமாணிக்கம் மனமுடைந்து காணப்பட்டு உள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தென்தாமரைகுளம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து, ஞானசெல்வம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் தனியார் கல்லூரி ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் தேரிவிளை பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.