ஓடும் பேருந்தில் நெஞ்சுவலி… பயணிகளை காத்து, உயிர் துறந்த ஓட்டுநர்…

 

ஓடும் பேருந்தில் நெஞ்சுவலி… பயணிகளை காத்து, உயிர் துறந்த ஓட்டுநர்…

திருச்சி

திருச்சியில் ஓடும் பேருந்தில் நெஞ்சுவலி ஏற்பட்டதால், காலி நிலத்தில் பேருந்தை இறக்கி பயணிகளை காத்த ஓட்டுநர், பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூர் அடுத்த பூனைக்குத்திபட்டியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் திருச்சியில் இருந்து புதுகோட்டை மாவட்டம் அன்னவாசலுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்தில் ஒட்டுநராக பணிபுரிந்து வந்தார். நேற்று வழக்கம்போல் திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அன்னவாசலுக்கு சென்று கொண்டிருந்தார்.

விராலிமலை அருகேயுள்ள பாத்திமா நகர் பகுதியில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் ஆனந்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதில் நிலை குழைந்த ஆனந்த் பயணிகளை காப்பாற்றும் நோக்கில் பேருந்தை நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த காலி நிலத்தில் இறக்கிவிட்டு மயங்கி விழுந்தார்.

ஓடும் பேருந்தில் நெஞ்சுவலி… பயணிகளை காத்து, உயிர் துறந்த ஓட்டுநர்…

இதில் பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், மயங்கி கிடந்த ஆனந்தை உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆனந்தை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

நெஞ்சவலியால் துடித்தபோதும், பயணிகளை காப்பற்றி விட்டு தன்னுயிரை ஈந்த ஓட்டுநர் ஆனந்தின் மரணம் பேருந்து பயணிகளை மட்டுமின்றி, அவருடைய கிராமத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து விராலிமலை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.