இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து – இருவர் பலி!

 

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து – இருவர் பலி!

திருச்சி

திருச்சியில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

திருச்சி மாநகர் அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்தவர்கள் மாலிக் பாட்ஷா (23), ஷாஜகான்(30). உறவினர்களான இருவரும் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் அரியமங்கலத்தில் இருந்து பால்பண்ணை ரவுண்டானா நோக்கி திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். பழைய பால்பண்ணை அருகே சென்றபோது, அவர்கள் வாகனத்தின் மீது எதிரே வந்த தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து – இருவர் பலி!

இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்டதில் படுகாயமடைந்த மாலிக் பாட்ஷா மற்றும் ஷாஜகான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து மாநகர போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பேருந்து ஓட்டுநர் ராபின் குழந்தைராஜ் என்பவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.