3 வீரர்களுக்கு காயம்… 2 இளம் வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட் – இங்கிலாந்த சம்பவம் பண்ண ரெடி!

 

3 வீரர்களுக்கு காயம்… 2 இளம் வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட் – இங்கிலாந்த சம்பவம் பண்ண ரெடி!

முழுவதுமே மூத்த வீரர்களை மட்டுமே உள்ளடக்கிய இந்திய அணி ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் மோதுகிறது. மொத்தமாக ஐந்து போட்டிகள் நடைபெறும் இந்தத் தொடருக்கு ஏற்கெனவே அணிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்த அணிக்கு விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

3 வீரர்களுக்கு காயம்… 2 இளம் வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட் – இங்கிலாந்த சம்பவம் பண்ண ரெடி!

இந்த அணியில் ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, பண்ட், அஸ்வின், ஜடேஜா,அக்சர் படேல், பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், விருத்திமான் சஹா, அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் சுப்மன் கில், வாசிங்டன் சுந்தர், ஆவேஸ் கான் ஆகிய மூவரும் இருந்தனர்.

3 வீரர்களுக்கு காயம்… 2 இளம் வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட் – இங்கிலாந்த சம்பவம் பண்ண ரெடி!

இச்சூழலில் போட்டிக்கு தயாராவதற்காக வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பயிற்சியின்போது கில், சுந்தர், ஆவேஸ் கான் ஆகிய மூவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் இவர்கள் மூவரும் டெஸ்ட் அணியிலிருந்து விலகியிருக்கிறார்கள். தற்போது இவர்களுக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ்வும் பிரித்வி ஷாவும் அணியில் இணைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

3 வீரர்களுக்கு காயம்… 2 இளம் வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட் – இங்கிலாந்த சம்பவம் பண்ண ரெடி!

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களைக் கொண்ட மற்றொரு இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இளம் அணியில் சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா உள்ளனர். தற்போது இவர்கள் இலங்கைக்கு எதிராக டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இருவரும் நல்ல ஃபார்மில் இருப்பதால் இவர்கள் மூத்த வீரர்களுடன் இங்கிலாந்தில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.