திருச்சியில் விசாரணை கைதி தப்பியோட்டம் – போலீசார் விசாரணை

 

திருச்சியில் விசாரணை கைதி தப்பியோட்டம் – போலீசார் விசாரணை

திருச்சி

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் விசாரணை கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் பகுதியை சேர்ந்தவர் காளிராஜன் (37). கடந்த மாதம் குற்ற வழக்கு ஒன்றில் கைதாகிய இவர், திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதி ஆக அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், அவரை நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச்செல்ல திண்டுக்கல் நகர காவல் நிலைய பெண் காவலர் உள்ளிட்ட இருவர் நேற்று திருச்சி மத்திய சிறைக்கு வந்தனர்.

திருச்சியில் விசாரணை கைதி தப்பியோட்டம் – போலீசார் விசாரணை

பின்னர், காளிராஜனை அழைத்துக்கொண்டு அவர்கள், அரசுப் பேருந்து மூலம் திருச்சி மத்திய பேருநது நிலையம் சென்றடைந்தனர். அங்கு திண்டுக்கல் செல்ல பேருந்துக்காக காத்திருந்த போது, காளிராஜன் இயற்கை உபாதை கழிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். இதனால் காவலர் அவரை கழிப்பறைக்கு அனுப்பி விட்டு, வெளியே காத்திருந்தார்.

நீண்ட நேரம் ஆகியும் காளிராஜன் திரும்பாததால் சந்தேகம் அடைந்த காவலர், உள்ளே சென்று பார்த்தார். அப்போது, காளிராஜன் சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்ச்சி அடைந்த காவலர்கள், திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் தப்பியோடி காளிராஜனை தேடி வருகின்றனர்.