கைதி தப்பியோட்டம் : காவலில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

 

கைதி தப்பியோட்டம் : காவலில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

புதியம்புத்தூரில் கைதி தப்பியோடிய விவகாரத்தில் எஸ்.எஸ்.ஐ. சந்திரசேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கைதி தப்பியோட்டம் : காவலில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரைச் சேர்ந்த நாகராஜ் மகன் மாயகிருஷ்ணன். இவரும் இவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து பைக்குகளை திருடி வந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட
இவர்களை புதியம்புத்தூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், காவலர் சுடலைமுத்து ஆகிய இருவரும் போலீஸ் வாகனத்தில் அழைத்து வந்து தூத்துக்குடி மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதை தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி இரவு பேரூரணி சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்ற போது மாயகிருஷ்ணன் தப்பி ஓடியுள்ளார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

கைதி தப்பியோட்டம் : காவலில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

இந்நிலையில் கைதி தப்பியோடியது தொடர்பாக சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், காவலர் சுடலைமுத்து ஆகியோரை தூத்துக்குடி எஸ்பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் . இதனிடையே தப்பியோடிய மாயகிருஷ்ணன் விளாத்திகுளம் அருகே பதுங்கியிருந்த போது போலீசார் அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.