பிரதமர் மோடி வருகை : சென்னையில் 4 அடுக்கு பாதுகாப்பு!

 

பிரதமர் மோடி வருகை : சென்னையில் 4 அடுக்கு பாதுகாப்பு!

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகை : சென்னையில் 4 அடுக்கு பாதுகாப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி வரும் 14ம் தேதி வரவிருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜக தலைவரான மோடியின் வருகை அரசியல் ரீதியானதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், தமிழக அரசு சார்பில் தொடங்கவிருக்கும் பல்வேறு திட்டங்களை தொடக்கி வைப்பதற்காக மட்டுமே மோடி சென்னை வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 14ம் தேதியன்று காலை 10.40 மணிக்கு சென்னை வரும் மோடி, 11 மணிக்கு நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கிறார்.

பிரதமர் மோடி வருகை : சென்னையில் 4 அடுக்கு பாதுகாப்பு!

அங்கு பல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்த பிறகு, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள சந்திப்பில் பங்கேற்கிறார். 3 மணி நேரம் மட்டுமே சென்னையில் இருக்கும் பிரதமர் பிற்பகல் 1.30 மணிக்கு கொச்சிக்கு புறப்படுகிறார். பிரதமர் மோடி நாளை மறுநாள் சென்னை வரவிருப்பதையொட்டி, 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை ஏர்போர்ட், அடையாறு ஐஎன்எஸ், நேரு ஸ்டேடியம் உள்ளிட்ட இடங்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.