செங்கோட்டையில் 7வது முறையாக தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி

 

செங்கோட்டையில் 7வது முறையாக தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி

 74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சமூக இடைவெளி, முகக கவசம் அணிதல்  என பாதுகாப்பு வழிமுறை நெறிகளுடன் சுதந்திர தினம் கொண்டாட மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

செங்கோட்டையில் 7வது முறையாக தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி

இருப்பினும் கொரோனா காலம் என்பதால் வழக்கமான மக்கள் கூட்டம் கலை நிகழ்ச்சிகள் இன்றி எளிமையாக இந்தாண்டு விழா கொண்டப்பட்டன.

செங்கோட்டையில் 7வது முறையாக தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி

இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி 7வது முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்.  முன்னதாக அவர் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் முப்படைகளின் மரியாதையை ஏற்றார்.  இந்த விழாவின் போது குறைந்த அளவில் விருந்தினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். விழா முழுவதும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.