அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி : தனிமனித இடைவெளியுடன் வரவேற்பு!

 

அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி : தனிமனித இடைவெளியுடன் வரவேற்பு!

அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழா இன்று  நடக்கிறது. இதில் மொத்தம் 200 பேருக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு யாரும் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்பதால் வீட்டிலிருந்தே இதை கண்டு களிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி : தனிமனித இடைவெளியுடன் வரவேற்பு!

இதில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் நிர்த்திய கோபால் தாஸ் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். அடிக்கல் நாட்டு விழா சரியாக 12.30க்கு தொடங்கி 12.40க்குள் நடைபெறும்.

அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி : தனிமனித இடைவெளியுடன் வரவேற்பு!

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி அயோத்திக்கு வந்தடைந்துள்ளார்.  ராமஜென்ம பூமி பூஜையில் பிரதமர் மோடி 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டுகிறார் . லக்னோவிலிருந்து ஹெலிகாப்டரில் அயோத்தி வந்த மோடியை தனிமனித இடைவெளியுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.