புதுச்சேரியில் 31 ஆண்டுகளுக்கு பிறகு… 7ஆவது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமல்!

 

புதுச்சேரியில் 31 ஆண்டுகளுக்கு பிறகு… 7ஆவது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமல்!

புதுச்சேரி அரசியலைப் பொறுத்தவரையில் அங்கே முதல்வர் நாற்காலி சுழல் நாற்காலியாகவே அமைந்துள்ளது. அதைத் தான் நமக்கு வரலாறும் உணர்த்துகிறது. ரெங்கசாமியைத் தவிர்த்து யாரும் 5 ஆண்டு காலம் முதல்வர் நாற்காலியை அலங்கரித்ததில்லை என்ற சுவாரசிய தகவலும் அடங்கியிருக்கிறது.

புதுச்சேரியில் 31 ஆண்டுகளுக்கு பிறகு… 7ஆவது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமல்!

கூடவே மற்றொன்றையும் புலப்படுத்துகிறது. புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி செயல்பட்டதை விட ஜனாதிபதி ஆட்சியே நிறைய முறை அமலில் இருந்திருக்கிறது. இதுவரை அங்கு 6 முறை ஜனாதிபதி ஆட்சி அமைந்திருக்கிறது. 1968இல் தொடங்கிய இந்தப் பாரம்பரியம் 1974இல் இரு முறை, 1978,1980 ஆகிய ஆண்டுகளில் தலா ஒருமுறையும் 1990ஆம் ஆண்டில் முடிவுற்றது. தற்போது 31 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படவுள்ளது.

புதுச்சேரியில் 31 ஆண்டுகளுக்கு பிறகு… 7ஆவது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமல்!

அடுத்தடுத்து 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. சட்டப்பேரவையில் நாராயணசாமி அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும் கொடுத்துவிட்டார்.

புதுச்சேரியில் 31 ஆண்டுகளுக்கு பிறகு… 7ஆவது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமல்!

இதையடுத்து பெரும்பான்மையாக இருக்கும் அதிமுக-என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதனால் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரைக்கிறார். மத்திய அமைச்சரவை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இன்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டால் இது 7ஆவது முறை.