குடியரசு தலைவருக்கு இதய பைபாஸ் சிகிச்சை!
Mar 27, 2021, 21:37 IST1616861256000
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை, பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர். இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மேல் பரிசோதனைகளுக்காக, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் ஆலோசைனைப்படி, அவருக்கு வரும் 30-ம் தேதி இதய பைபாஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக குடியரசு தலைவர் மாளிகை அலுவலக செயலாளர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.