முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவு: குடியரசுத் தலைவர் இரங்கல்!

 

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவு: குடியரசுத் தலைவர் இரங்கல்!

முதல்வரின் தாயார் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் நேற்று நள்ளிரவு மாரடைப்பால் காலமானார். அவரது உடல் சேலத்தில் இருக்கும் முதல்வரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் நேற்று காலை 10 மணி அளவில் சிலுவம்பாளையத்தில் இருக்கும் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவு: குடியரசுத் தலைவர் இரங்கல்!

அவரது மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தொல்.திருமாவளவன், வைகோ, ஜிகே வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ரஜினி, பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல்வர் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவு: குடியரசுத் தலைவர் இரங்கல்!

அதில், முதல்வர் பழனிசாமிக்கும் அவரது குடும்பத்துக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர அனைவருக்கும் வலிமை கிடைக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.