‘பாடும் நிலா மறைந்தது’..எஸ்.பிபியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் இரங்கல்!

 

‘பாடும் நிலா மறைந்தது’..எஸ்.பிபியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் இரங்கல்!

பிரபல பாடகர் எஸ்.பி.பியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மக்கள் மனதில் தனது பாடல் வசத்தால் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அண்மையில் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக வெளியான செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருக்காக கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது. அவர் மீண்டு வர வேண்டும் என பிரபலங்களும் பொதுமக்களும் இசை பிரியர்களும் பிரார்த்தித்து வந்தனர். இந்த நிலையில் தீவிர நிமோனியா மற்றும் இதய – சுவாச மண்டல செயலிழப்பால் பாடகர் எஸ்.பிபி இன்று பிற்பகல் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

‘பாடும் நிலா மறைந்தது’..எஸ்.பிபியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் இரங்கல்!

அந்த வகையில் தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் இரங்கல் தெரிவித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். குடியரசுத் தலைவரின் பதிவில், “பாடும் நிலா என கூறப்படும் எஸ்.பி.பியின் மெல்லியக் குரலை இழந்து விட்டோம், பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகள் பெற்ற எஸ்.பி.பியின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

‘பாடும் நிலா மறைந்தது’..எஸ்.பிபியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் இரங்கல்!

அதே போல, குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, “இசை உலகில் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை அவர் விட்டுச் சென்றிருக்கிறார் எஸ்.பிபி. அவரின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். எஸ்.பிபியின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.