நோட்டீஸ் ஒட்டினால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்

 

நோட்டீஸ் ஒட்டினால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்

தங்களது வீட்டில் தனிமைப்படுத்துதல் போஸ்டர் ஒட்டுவதில் எந்த பிரச்னையும் இல்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவரான விஜயகாந்திற்கு கொரோனா உறுதியானதால் அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்தில் தனிமைப்படுத்துதல் போஸ்டர் ஒட்டப்பட்டு வரும் நிலையில், இன்று பிற்பகல் சாலிகிராமத்தில் இருக்கும் விஜயகாந்த் வீட்டுக்கும் நோட்டீஸ் ஒட்ட மாநகராட்சி ஊழியர்கள் சென்றிருந்தனர்.

நோட்டீஸ் ஒட்டினால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்

அப்போது அங்கு இருந்த பணியாளர்கள் நோட்டீஸ் ஒட்ட எதிர்ப்பு தெரிவித்ததால், ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டாமலேயே அங்கிருந்து திரும்பினர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், அரசின் அனைத்து விதிகளையும் தேமுதிக மதிக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும் என்றும் நோட்டீஸ் ஒட்டுவதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் என்றும் சிறு அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்றும் கூறினார்.